Tuesday 7 February 2012

Liebster Blog Award - அவார்டு கொடுக்க போறேன்..வாங்கங்கோ வாங்கோ.

@@ முதலில் வருகை தந்திருக்கும் பெரியவர்களுக்கும் வாசக நண்பர்களுக்கும் ஒரு ஸ்வீட்டான, இனிமையான, மகிழ்ச்சியான, சந்தோஷமான, (ச்சே சரிதான் விடுடா ரொம்பதான் தூசி தட்டுற..) வணக்கமுங்க..@@ 


முன் குறிப்பு : 
(1) என்னுடைய கதை..ஆரம்ப கதை..சோக கதை.வரலாற்று கதை.
(2) எனக்கு இந்த விருதை வழங்கியவருக்கு அன்பு காணிக்கை          
(3) விருதை பற்றிய சிறிய அறிமுகம் (கட்டாயம் படிக்க வேண்டியது
================================================================

(1)   நல்லாவே இந்த ஞாபகம் மூளையில தாண்டவம் ஆடுது..சரியாக ஒரு வருடத்துக்கும் மேலாக ஆகிறது..தமிழ்ப்பதிவுலகில் நானும் வாசகனாகி..அதுவரை ஹாலிவுட், தமிழ் மசாலா படங்களுக்கு அடிமையாகி போன என்னை புதிய சினிமா உலகுக்கு இந்த தமிழ்ப்பதிவுலகம் அழைத்து வந்தது.சினிமா மீது உண்மையான மரியாதை பிறந்தது..சினிமா பற்றிய கட்டுரைகள் விமர்சனங்கள் என்று விடாது கிடைத்தவற்றை படிப்பதோடு பிடிஎஃப் கோப்புகளாக சேமிக்க தொடங்கிய காலக்கட்டம் அது..மனதை தட்டி எழுப்பியது.பள்ளி நேரமும் பாடமும் போக மீதி நேரங்களில் எடுத்து வைத்தவற்றை படிக்கலானேன்..ஆர்வங்கள் நிறையவே..இந்த தமிழ் தங்க சினிமா பதிவுகள் எந்தன் பார்வைகளுக்கு திரை வடிவங்கள் கொடுத்தன.அதுவர யூத்யூப் வீடியோக்கல் என்று இருந்த என்னை, இந்த ஆர்வங்கள் பல இணையத்தளங்களையும் மென்பொருள்களையும் பதிவிறக்ககளை நோக்கியும் பயணிக்க வைத்தன.இதனது தொடக்கமே புதிய சினிமா..புது வடிவம்.மெல்ல மெல்ல விமர்சனங்களை படிக்க படங்களை பார்க்க தொடங்கினேன்.

என்னுள் பல புதிய மாற்றங்கள்.
         .ஏன் நானும் ஒரு வலைப்பூ தொடங்கக்கூடாது,,.?? எனக்கு தோன்றியவற்றை ஏதோ ஒரு வடிவில் பதிவுச்செய்ய விரும்பினேன்.ஒரு பள்ளி விடுமுறை அதற்கு வழி வகுந்தது..சென்ற ஆண்டு (2011) செப்டம்பர் 2 ஆம் திகதி " எண்ணங்களும் திரைவண்ணங்களும் " என்ற பெயரில் தொடங்கியதுதான் இந்த வலைப்பூ..பதிவுலகத்தை வாசகனாக தொடங்கிய பயணத்தில் பதிவுலகில் ஒரு உறுப்பினராக சேர்ந்துவிட்டு அடுத்து என்ன செய்வதென்று கூட அறியாது தொடர்ந்து சில பதிவுகள் இட்டேன்..ஆதரவுகள் கண்களை எட்டின, கருத்துக்கள் மனதை ஊக்குவித்தன..எழுதினேன்..இன்றுவரை தொடர்கிறேன்./உங்களை போன்றவர்களின் ஆசியில்..

என் மீதான இன்றைய பார்வைகள் மிக தாமதமாக ஏற்பட்டவை என்பதை இங்கு குறிப்பிட இழைகிறேன்.அதற்கு காரணமும் நானே என்பதில் துளியும் சந்தேகமில்லை.
========================================================================

(2) சரி விடு பயப்புள்ள வுட்டா சீரியலா வச்சி கழுத்த அறுப்ப போல..மெய்ன்ஸ்டிரீமா மேட்டருக்கு வாரியா ??

முனு நாலு இருக்கும்..ராத்திரி ரொம்ப சந்தோஷமா கண்ண மூடுனேன் (அட..தூக்கங்க..நீங்க அவசக்கொணமா வச்சிக்காதிங்க)..அதற்கு முழுமையான காரணம் நம்ம பிரபல பதிவர் நம்ம நண்பர் ஹாலிவுட் ரசிகர்தான்//திடீரென்று வந்து ஒரு பின்னூட்டம் ""இந்த மாதிரி...இந்த மாதிரிங்க..ஒரு அவார்டுங்க.அதை எனக்கு கொடுத்தாங்க..அதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்"" (இது என்னோட வார்த்தைகள்..அவரு ரொம்ப அழகா போட்டிருந்தாறு) என்று இருந்தது..உடனே அவருடைய போஸ்ட்டுக்கு செல்ல அழகான முழுமையான விளக்கங்கள் அவருடைய பாணியில் சிறப்பாக இருந்தது..அதில் அவர் இந்த விருதை பகிந்துக்கொண்ட ஐந்து பதிவர்களில் எனது வலைப்பூவும் இருந்தது..

  @@ என்னுடைய ஒவ்வொரு பதிவுக்கும் (நான் எவ்வளவு தாரு மாறா எழுதி வச்சாலும்) நல்லாருக்கு என்று சில வார்த்தைகளால் என் நெஞ்சை நிரப்பிய அன்பு நண்பர் ஹாலிவுட் ரசிகரே...தங்களுடைய விருதை மனதார பகிர்ந்துக்கொள்வதோடு நன்றிகளை கூறிக்கொள்கிறேன்.நன்றிங்க. @@

என்னைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு பதிவர்கள் தத்தம் பாணியில் சிறப்பான எழுத்து வண்ணங்களை தமிழாக வழங்கி வரும் போது, எனது எழுத்தையும் மதித்து பகிர்ந்ததில் என் மகிழ்ச்சியை உங்களுக்கு கூறிக்கொள்கிறேன் நண்பரே..

ஹாலிவுட் ரசிகர் : http://hollywoodrasigan.blogspot.in/ 
===================================================================================


(3) 'லீப்ஷ்டர்வலைப்பதிவர்களுக்கு ஜெர்மனியில் வழங்கப்படுகின்ற விருதாம்..அதனது அர்த்தம் 'மிகவும் பிடித்த என்பதாகும்'. "இதைப் பெறுபவர், மேலும் தான் விரும்பும் 5 இளம் வலைப்பூக்களுக்கு அதாவது 200 உறுப்பினர்களுக்கு குறைவாக உள்ள வலைகளுக்கு விருது வழங்க வேண்டும். இதை தாங்கள் ஏற்றுக் கொண்டதன்  அடையாளமாக அதன் படத்தை தங்கள் வலையில் காப்பி  -பேஸ்ட் செய்து கொள்ளவும்.அந்த தொடர் சங்கிலியை உடைத்து விடாமல் மறவாமல் 5 பேர்களுக்கு வழங்கி புளங்காகிதம் அடைக."

Rules :

•Thank your Liebster Blog Award presenter on your blog.
•Link back to the blogger who presented the award to you.
•Copy and paste the blog award on your blog.
•Present the Liebster Blog Award to 5 blogs of 200 followers or less who you feel deserve
to be noticed. (Some say just 3 or more blogs of less than 200 followers each).
•Let them know they have been chosen by leaving a comment at their blog.
===========================================

(4) அவர் சொன்ன இந்த சங்கிலியை இங்கிருந்து தொடர்கிறேன்..அந்த ஐந்து பதிவர்களின் விபரங்கள் பின்வருமாறு.

(1) தமிழ் சினிமா உலகம் (சாவி) - சமீபத்தில் கிடைத்த ஒரு சிறந்த அறிமுகம்.வலை தலைப்புதான் தமிழ் சினிமா என்று இருக்கிறதே தவிர, ஹாலிவுட், தமிழ், தெலுகு என்று அனைத்து பிரிவுகளீலும் பின்னிப்பெடலை எடுக்கிறார்.சினிமாவின் மீதான இவரது காதல், இவர் வலையை பார்த்தாலே தெரியும்.இரண்டே நாளில் ஐந்து விமர்சனங்கள் எழுதி கலக்கிட்டாருன்னா பாருங்க..

(2) என் கிறுக்கல்கள்..(பிரசன்னா கண்ணன்) - சில மாதங்களுக்கு முன்பு கிடைத்த அறிமுகம்தான் என்றாலும்..அவரது பதிவுகள் சிலவற்றை படித்ததன் வழியே பெரிய ரசிகன் ஆகிவிட்டேன்..நான்கு ஆண்டு காலமாக பதிவுலகத்தில் இருந்து வருபவர்..குறைவாக எழுதினாலும் நிறைவாகவே எழுதுகிறார்.சினிமா, திரை இசை, என்று பல பிரிவுகளில் எழுதி வருகிறார்.அல்பிரட் ஹிட்ச்காக் பற்றி இவர் எழுதிய பதிவு, எனக்கு ஒரு இன்ஸ்பிரஷன்.இவர் அதிகமாக எழுத வேண்டும் என்பது என்னுடைய அவா.. 

(3) பாரதிக்குமார் - திடீரென்று ஒரு நாள் எதர்ச்சையாக இவரது வலைப்பூவுக்கு செல்ல, இவரது எழுத்துக்கு பரம ரசிகனானேன் என்பதே உண்மை.அயல்மொழி திரைப்பட விமர்சனம், சிறுகதை, கவிதை என்று என்ன வேண்டும் உங்களுக்கு..அத்தனையும் எளிதான தமிழிலும் சிறப்பான எழுத்து நடையும் இவரது வலையில் கொட்டிக்கிடக்கின்றன.இவர் ஒரு கவிஞர் என்பதை எழுத்துக்களே நிரூப்பிக்கின்றன..

(4) udanpirappe (Ravi Shankar) @@ பிறந்தோம்னா ஏதாவது சாதிக்கணும்,இல்லைனா இப்படி வலைப்பூவ ஆரம்பிச்சிடணும் ! @@ - இதுதாங்க இவரோட வார்த்தைகள்..இவரை ரொம்ப நாளாகவே தெரியும்.நன்றாக தொடர்ந்து எழுதி வருபவர்..சினிமா, சிறுகதைகள், சமூகம் என்று அத்தனையிலும் கலக்கி வருபவர்.இப்பக்கூட இவரோட வலையில அப்பா - மகன் சிறுகதை ஒன்னு பண்ணிருகாரு.. படிக்காதவங்க டக்குன்னு போய் படிச்சு ஃபால்லோவெர் ஆகிடுங்க

(5) The Good Stranger - கடந்த நான்கு வருடங்களாக எழுதி வரும் சூப்பர் பதிவாளர்..நகைச்சுவை, கவிதை, சினிமா விமர்சனம், சிறுகதைகள் என்று பலவிதமான பதிவுகளை அருமையாக எழுதி வருபவர்.இவருடைய அதிகமான பதிவுகளை படித்ததில்லை..ஆனால், சிறப்பாக இருக்கும்..இதுவரை 116 FOLLOWERS இருக்காங்கனா பாருங்க.

 சோ..இதன் மூலம் என்னோட ஐன்ஸ்டன் மூளை சொல்ல வருறது என்னானா..பதிவர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்..மற்றும் இதுவரை என்னுடைய எழுத்துக்கும் ஆதரவு வழங்கிவரும் வாசகர்களுக்கு நன்றிகள்.சரிங்க இதோடு இந்த விழாவை விட்டு விடைப்பெறுவோமா ?? பை..பை. 
====================================== 

ஏதேனும் தவறாக குறிப்பிட்டிருந்தால் மன்னிப்பதோடு கருத்துக்கள் இருந்தால் தயவு செய்து கமெண்ட்ஸ் பாக்ஸில் குறிப்பிடவும்....மேலும், தங்களுக்கு பதிவுகள் பிடிக்குமெனின் ஓட்டளித்து ஊக்கமளியுங்கள்.சிறந்த ஆதரவுகளே சிறப்பான படைப்புகளை உருவாக்கும் என்ற நம்பிக்கையில் மீண்டும் அடுத்த பதிவில் சந்திக்கலாம்..அதுவரை நன்றி மற்றும் வணக்கம்.

உங்கள் ஆதரோவோடு,

33 comments:

  1. அழகா பகுதி, பகுதியா பிரிச்சு எழுதியிருக்கீங்க..
    ரொம்ப பேரை எனக்கு இன்ட்ரடியூஸ் பண்ணி வைச்சிருக்கீங்க.. ரொம்ப நன்றி. எல்லாருக்கும் வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றிகள்..நண்பரே.

      Delete
  2. //அதற்கு முழுமையான காரணம் நம்ம பிரபல பதிவர் நம்ம நண்பர் ஹாலிவுட் ரசிகர்தான்//
    யோவ் ... இது ரொம்ப ஓவர் சரியா? ஏதோ ஒரு மாதமாத் தான் உருப்படியா பதிவை எழுதிட்டு இருக்கேன். அதுக்குள்ள ஏன்யா ரீல் சுத்துறீங்க? இந்தாப் பாருங்க .... இதுக்கு மேல “பிரபல”ங்கிற வார்த்தைய கேட்டேன் உங்க பேரை அவார்ட் லிஸ்ட்டுல இருந்து கட் பண்ணிடுவேன். ஹி ஹி

    ReplyDelete
    Replies
    1. அட போங்கப்பா..இப்பல்லாம் நாலு வார்த்த நல்லதா எழுதானாதான் படிக்கவே வராங்க..இப்ப நீங்க கிடைச்சீங்க....ஏங்க ஒரு கேள்வி... அப்படி என்ன பெரிசா புகழ்துட்டன்... வேணுமுனா "பிரபலத்துக்கு" பதிலா பேமஸ் - னு போட்டுக்கிறேன்..ஓகே,,ஹி..ஹி..ஹி..ஹீ (இது பெரிய ஹீ)

      Delete
  3. இந்த முறை பதிவுல நக்கல் கொஞ்சம் தூக்கலா இருக்கு? அடடா ... அதான் என்னைப் பிரபல-பதிவர்னு சொன்னீங்களா? நக்கல் நக்கலாத் தான் இருக்கணும். ஓகே ...

    ReplyDelete
    Replies
    1. ஏங்க இந்த பிரச்சனையில என்னை மாட்டி விட்டீங்க..நக்கல நானா எழுதுனுமுனு நெனைக்கிறேன்..ஏதோ என்னால முடிஞ்சது..பிடிச்சாலும் ஓகே.பிடிக்காட்டியும் ஓகே,,ஓகே..ஓகேவா..??

      Delete
    2. எப்படியோ..தங்களது வருகைக்கும் கொஞ்சம் பொடி தூக்கலான பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பரே..

      Delete
  4. உங்களுக்கு இந்த விருது கிடைத்ததில் சந்தோஷம், நீங்கள் விருதினை பகிர்ந்தவர்களுக்கும் எனது பாராட்டுகள்.

    ReplyDelete
    Replies
    1. @@ MuratuSingam @@
      தங்களது வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் என் நன்றிகள் நண்பரே..உங்களுக்கும் இது கிடைத்துள்ளது என்று படித்தேன்..வாழ்த்துக்கள்.

      Delete
  5. வாழ்த்துக்கள் பாஸ் கலக்குங்க

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்க...வணக்கம்.

      Delete
  6. விருது பெற்ற உங்களுக்கும் தகுதியானவர்களுக்கு வழங்கியதற்கும் என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் குமரன் ஸார்...

    ReplyDelete
    Replies
    1. தங்களது இனிய வருகைக்கும்..பின்னூட்டம் இட்டதுக்கும் என் நன்றிகள் ஐயா..சார் மட்டும் வேண்டாமே..அனுபவத்திலும் வயதிலும் நான் உங்களை விட சிறியவன்.தவறாக நினைப்பின் மன்னிக்கவும்.

      Delete
  7. சகோ உங்களுக்கும் . நீங்கள் விருது வழங்கிய ஏனைய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் , தொடர்தும் கலக்குங்க பாஸ்

    ReplyDelete
    Replies
    1. @@ Mahan.Thamesh @@
      தங்களது இனிய நல்வருகைக்கு என் நன்றிகள் சகோ..தொடர்ந்து வாங்கோ..

      Delete
  8. வணக்கம் சகோதரம்,

    இந்த விருதினை தங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் சொந்தங்களுக்கு இனிய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்,

    இவ் விருதினைப் பெற்றுக் கொண்ட உங்களுக்கும் நல்வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே,
      தங்களது வருகைக்கும் பின்னூட்ட வாழ்த்துகளுக்கும் என் நன்றிகள்//

      Delete
  9. உங்கள் வலைப் பூ வாழ்வு பற்றிய நினைவு மீட்டல் கடந்த காலத்தில் எழுத்துலகில் நீங்கள் பெற்றுக் கொண்ட அனுபவங்களை மீட்டிப் பார்க்க உதவியிருக்கிறது.

    நன்றி நண்பா

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே,
      ரொம்ப ரொம்ப நன்றிகள்..தொடர்ந்து வருகை தாருங்கள்....

      Delete
  10. மனமார்ந்த பாராட்டுகள்.. தங்கள் முயற்சி தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்.
      நன்றி சகோ..தங்களது எழுதுக்களையும் வாசித்தேன்.அருமையான கவிதைகள்..தங்கள் பணியும் தொடர எதிர்ப்பார்க்கிறேன்.

      Delete
  11. குமரன் அவர்களிடம் விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. தங்களது வருகைக்கு மீண்டும் பல நன்றிகள் சகோ..அவர்கள் எல்லாம் வேண்டாமே..நான் அவ்வளவு பெரிய மனிதன் இல்லை.குமரன் என்றே சொல்லுங்கள்..

      Delete
  12. நண்பர் குமரன் ஓட்டுபட்டையை சரி செய்யுங்கோ! இது நாலு பேருக்கு போய் சேரனும்.....
    http://www.bloggernanban.com/2012/02/blog-post.html
    இதுல வழி கொடுத்திருக்காங்க...

    ReplyDelete
    Replies
    1. எனக்கு என்னவோ ஒட்டுப்பட்டை சரியாக வேலை செய்கிறது என்றே நினைக்கிறென்..ஏன் தங்களால் ஓட்டு போட முடியவில்லையா சகோ ?? எதற்கும் முயற்சி செய்கிறேன்.சொன்னதற்கு நன்றி.

      Delete
  13. நான் இந்த விருதுக்கு தகுதியா என தெரியவில்லை ,உங்கள் அன்புக்கும் ,பாசத்திற்கும் என் மிகப் பெரிய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .. அவசியம் உங்களைப் பார்க்க வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் நண்பரே,
      தங்களது வருகைக்கு மிக்க நன்றி..இந்த விருதுக்கு தகுதியானவர் நீங்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை..இப்பொழுதுக்கூட தங்களது விமர்சனம் படித்தேன்..சிறப்பாக உள்ளது..தொடர்ந்து வாருங்கள்.நான் வசிப்பது மலேசியாவில் நண்பரே..வாய்ப்புகள் கிடைப்பின் கண்டிப்பாக சந்திப்போம்.

      Delete
  14. விருதுக்கு நன்றி தோழரே.

    சாவியின் தமிழ் சினிமா உலகம்

    ருத்ரபூமி 10-02-2012 Journey 2: The Mysterious Island திரை விமர்சனம்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி நண்பரே..
      விமர்சனம் படித்தேன்..சிறப்பாக உள்ளது..

      Delete
  15. அனைவருக்கும் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. தங்களது முதல் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பரே..தொடர்ந்து வருகை அளியுங்கள்.

      Delete
  16. மிக்க நன்றி :-))

    ReplyDelete
    Replies
    1. தங்களுக்கு விருதை பகிர்ந்ததில் மகிழ்கிறது மனம்.வருகைக்கும் நன்றி.

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...