Friday 7 October 2016

Arnold Schwarzenegger ஒரு பார்வை 1

“I’M GOING TO BE THE NUMBER ONE BOX OFFICE STAR  IN ALL OF HOLLYWOOD.”
"பாவனையே இல்ல, கட்டைப் போல நடிக்கிறான்" என்று சொல்லும் அளவுக்கு இறுக்கமான முகம், ஆங்கிலம் சரிவர உச்சரிக்க, பேச தெரியாத நிலை, ஹீரோவாகக்கூட ஆக முடியாமல் பொம்மை போல திரையில் வந்துப்போன அதுவும் அமெரிக்க குடிமகனாக இல்லாத ஒரு நடிகன்,1976 ஆண்டு ஒரு பத்திரிக்கையின் பேட்டியில் கூறியபோது பத்திரிக்கையாளர் உட்பட படித்தவர்களும் அநேகமாக சிரித்திருக்கக்கூடும். குருட்டு நம்பிக்கை என்றிருப்பர், இன்னும் சில கூட்டமோ முன் விட்டு பின்னால் கேளி செய்திருக்கும். சரியாக 15 வருடங்கள் கழித்து 1991 ஆம் ஆண்டு அதே அமெரிக்காவின் பல பிரபல தொலைக்காட்சிகள் "அந்த” நடிகனின் படமொன்றை"உலகத்திலேயே அதிகமாக வசூலான திரைப்படமாகவும்" உலகத்திலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகனாகவும்" புகழாரம் சூடிக்கொண்ருந்ததை பார்த்த பலரும் வாயடைத்து போடிருக்கக்கூடும்.அவனா இவரென்று...!!

 பல எல்லைகளை கடந்து போராட்டங்களுக்கு பிறகு உலகமெங்கும் தனக்கான ரசிகர்கள் கூட்டத்தை வசீகரித்துக்கொண்ட அந்த பெயர் Arnold Schwarzenegger/அர்னால்ட் ஸ்வார்சுநேகர்..அநேகமாக அமெரிக்க வரலாற்றில் இந்தளவுக்கு உச்சரிக்க கடினமான பெயரில் சூப்பர் ஸ்டார் உருவாகிருக்க வாய்ப்பில்லை.பாடி பில்டராக தன்னுடைய வாழ்வை தொடங்கி உச்ச சினிமா நட்சத்திரமாக உயர்ந்தது..ஆச்சரியப்படுத்துவதாக இருந்தாலும் அதற்காக அவருடைய தியாகமும் உழைப்பும் அசாதாரணமானது.சமீபத்தில் Arnold Schwarzenegger Biography என்ற டிவி சேனலின் நிகழ்ச்சியை இணையத்தில் பார்க்க கிடைத்தது.அமெரிக்கா போக வேண்டும்:மிக பெரிய ஹாலிவுட் ஸ்டாராக ஆக வேண்டும்:பிறகு கென்னடி குடும்பத்தை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்ற இவரது சிறு வயது கனவுகள்...நனைவாக மாறுவதற்கு பின்னால் இருந்த மிக நீண்ட வரலாற்றை, வாழ்வில் கடந்து வந்த பாதையை காட்சி ஊடாக காண கிடைத்தது.ஆஸ்டிரியாவின் கிராமத்தில் பிறந்த ஒரு சாமான்யன் பிறகு மிக பெரிய ஸ்டாராக உருவெடுத்து ஒரு மகாணத்தின் கவர்னராக மாறிய வரலாறு மிகவும் நீண்ட, வலிகள் மிகுந்த கதை..

"வெற்றி அடைய நினைப்பவர்களுக்கு ஓர் அறிவுரை..முதலில் தோல்விகளை அடையுங்கள், கஷ்டங்களை அனுபவியுங்கள்.உங்களை ராஜாவாக உருவாக்க போவது ரோஜாக்கள் நிறைந்த பாதையில்லை.அவை கரடு முரடான காட்டு முட்கள் நிறைந்தவை..காடுகளை அழியுங்கள்..மலைகளை முட்டுங்கள்.பிறகுதான் வெற்றி கதவு..திறக்க உதவ போவது சாவியல்ல..உங்கள் சாதனை"வாழ்க்கையில் நான் தோல்விகள் சந்திக்கும்போது எனக்கு நானே எழுதிக்கொள்ளும் சொல்லிக்கொள்ளும் வாசகம் இது.

"THERE IS NO OVERNIGHT SUCCESS OR OVERNIGHT SUPERSTAR."

என்று சொல்வார்கள்..ரஜினி, ஜாக்கிச்சான், ஆர்னல்டு போன்ற நடிகர்களை பார்க்கும் போது அடிக்கடி இந்த வாசகம் நினைவுக்கு வரும்.ஒரே நாளில் உயரத்தை தொட்டவர் எவருமில்லை..அதேப்போல் ஒரே திரைப்படத்தின் மூலம் சூப்பர் ஸ்டாராக உயர்ந்த நடிகரும் கிடையாது.அதற்கு பின்னால் இருக்கும் அவமானங்களும் உழைப்பும் எழுத்துக்களால் சித்தரிப்பது கடினம்..வந்தோம் நடிச்சோம்..காசு கிடைத்தது.செட்டல் ஆனோம்.இனி என்ன? என்று நினைப்பவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசம் ஏராளம்.ஒரு வெற்றியை தொடர்ந்து அந்த வெற்றியை தக்க வைக்க போராடும் குணமும் இவர்கள் செய்யும் புதிய முயற்சிகளும் தலைமுறை கடந்த ரசிகர்களை இவர்களுக்கு சொந்தமாக்குகிறது.

எனக்கு பிடித்த டாப் 10 நடிகர்ளில் எம்ஜிஆரும் ஒருவர்.நான் பிறப்பதற்கு முன்னமே மறைந்துவிட்ட நடிகரை எனக்கு பிடித்த நடிகராக என் நண்பர்களிடம் சொன்னால்..என்னடா பழைய நடிகர சொல்ற என்று கேட்பார்கள்.சிலரை காரணமே இல்லாமல் பிடிக்கும்.அந்த வரிசையில் எம்ஜிஆர்-சிவாஜி-இயக்குனர் ஸ்ரீதர், நாகேஸ் என பட்டியல் நீளும்.இவர்களது வாழ்க்கை பின்னனியை உற்றுப்பார்த்தால் கொஞ்சம் புரியும்.சினிமாவில் மட்டுமல்ல எந்த துறையாக இருந்தாலும் மக்கள் மனதை ஆட்கொண்ட எவருமே எளிமையான வழியில் வாய்ப்பு கிடைத்து வந்தவர்களோ, சிம்பிளாக வெற்றிக் கண்டவர்களாகவோ இருக்கவே மாட்டார்கள்.கடின உழைப்பும், விடாமுயற்சியும், பெரிய கனவுகளும், முற்போக்கான சிந்தனைகளும், திறமைகளும் மக்களை தன் வசம் ஈர்க்கக்கூடிய ஆற்றல் கொண்டவர்களாவே இருப்பார்கள்.

நல்ல கதைகளை தேர்ந்தெடுக்கும் போது ஒரு நடிகன், ஸ்டாராகலாம்.நல்ல கதைககள், உயர்ந்த இலட்சியங்கள் இணையும் பொழுது ஒரு சாதாரண ஸ்டார் கூட சூப்பர் ஸ்டாராக உருவாகலாம்.அந்த சக்தி அதற்கு உண்டு.டெர்மினெட்டெர் என்ற கதையும் உயர்ந்த கனவும்தான் இன்று ஜேம்ஸ் கேமரனை அவதார் வரை கொண்டு சென்றுள்ளது.சிறந்த கதைகளும் கனவுகளும்-தான் இந்தியாவின் கல்கத்தாவில் பிறந்த சத்யரஜித் ரே என்ற ஒரு சாதாரண ஓவியனை, மிக சிறந்த இயக்குனராக உலக சினிமா உயர்ந்து பார்க்கிறது.   
ஹெர்க்குலஸ் இன் நியூ யோர்க் படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்திருந்தாலும், முதல் வெற்றியை அடைய ஆர்னல்டு, சுமார் 12 ஆண்டுகள் காத்திருக்க வேண்டிருந்தது.கானன் தி பார்பரியன் ரசிகர்களை கவர்ந்திட, டெர்மினெட்டர் மக்கள் மனதில் ஆர்னல்டை இடம் பெறச்செய்தது.தொடர்ந்து வந்த கமாண்டவும், பிரேடேட்டரும் சாதாரண நடிகனாக இருந்தவரை ஸ்டாராக மாற்றியது.

40 வயது ஆகிவிட்டது..வாழ்க்கை முடிஞ்சு போச்சுனு என்பவர்கள் இருக்கும் உலகில், LIFE BEGIN AT 40 என்பதற்க்கு ஆதாரமாய் ஆர்னல்டின் அனைத்து வெற்றிகளும் 40 வயதை கடந்த நிலையில்தான் வந்து சேர்ந்தது...ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராக, இயக்குனராக, எழுத்தாளராக, சிறந்த பேச்சாளராக தன்னை வளர்த்துக்கொண்டதோடு நில்லாது அமெரிக்காவின் கலிஃபோர்னியா மகாணத்தின் கவர்னராக வெற்றிக்கண்டதை எண்ணும்போது அதிசயக்கவைக்கிறது.          
                                             
"மனம் உண்டானால் மார்க்கம் உண்டு".. 
"ஒரு கனவு கண்டால் அதை தினம் முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்" என்ற பாடல்களும் பழமொழிகளும்தான் ஞாபகம் வருகிறது        

ஹாலிவுட் சினிமாவின் எனது முதல் அறிமுகம் ஆர்னல்டும் அவரது திரைப்படங்களும்தான்..அவரது படங்கள் மீதான பைத்தியம் தீர்ந்தப்பாடில்லை..ஏறக்குறைய எல்லா படங்களும் பார்த்துவிட்ட நிலையில் எனக்கு பிடித்த டாப்-டென் ஆர்னல்டு திரைப்படங்கள் பற்றி எழுத வேண்டும் என்ற ஆவல் சமீபத்தில் உதித்தது..அதற்கான முன்னோட்டமாக இந்த பதிவு..மீண்டும் சந்திக்கலாம் "பார்வையோடு"..    


2 comments:

  1. சூப்பர் பாஸ்.சிறு வயதில் ஜாக்கி பிறகு எனக்கு தெரிந்த ஒரே வெளிநாட்டு நடிகர்.இவரோட கமாண்டோ தான் நான் பார்த்த முதல் படம் பிறகு ப்ரீடேட்டர்.கஷ்டம் இல்லாமல் எந்த வெற்றியும் இல்லை.கமெண்ட் பாக்ஸ் தெரியுற மாதிரி வையுங்க பாஸ்.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் பிரதர்..வருகைக்கு நன்றி.
      உங்களுக்கும் இந்த மாதிரி தானா...கேட்க சந்தோஷமா இருக்கு நண்பரே..
      கமெண்ட் பாக்ஸ் மாத்திட்டேன்..நன்றி

      Delete

Related Posts Plugin for WordPress, Blogger...